திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம், தச்சநல்லூர் காவல்துறையினர் (19.06.2026) அன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இந்திரா நகர் பகுதியில் வந்த லாரி ஒன்றை சோதனையிட்டபோது, அதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக லாரி ஓட்டுநரான பேட்டை தீன் நகரை சோ்ந்த சந்தோஷை (25). கைது செய்த காவல்துறையினர், சுமார் 4 கிலோ 600 கிராம் புகையிலைப் பொருள்கள் மற்றும் லாரியை பறிமுதல் செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்



















