தேர்தல் ஆணையம் லோக்சபா தேர்தலில் ஓட்டு அளிக்க வயது முதிர்ந்தவர்கள் (85 வயதுக்கு மேற்பட்டவர்கள்) மற்றும் மாற்றுத்திறனாளிகள் (40 சதவீதம்) வீட்டில் இருந்தபடியே தபால் ஓட்டும் மூலம் ஓட்டளிக்க வசதி வழங்கியுள்ளது தேர்தல் தேதி அறிவித்த தேதியில் இருந்து ஐந்து நாட்களுக்குள் ஓட்டு சாவடி நிலை அலுவலகங்கள் மூலம் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம்
இரண்டு ஓட்டு சாவடி அலுவலகங்கள், ஒரு வீடியோ கிராபர் மற்றும் ஒரு பாதுகாவலர் அடங்கிய ஓட்டுப்பதிவு குழுவானது வாக்காளரின் வீட்டிற்குச் சென்று வாக்காளரை தபால் ஓட்டு சீட்டில் வாக்களிக்க செய்து ஓட்டுப்பதிவின் ரகசியத்தை காப்பார்.
விண்ணப்பத்தில் குறிப்பிட்ட மொபைல் எண்ணில் குறுஞ்செய்தி தபால் அல்லது BLO (Booth Level Officer) மூலமாக ஓட்டுப்பதிவு குழு வருகை தரும் தேதி மற்றும் நேரம் குறித்து வாக்காளர்களுக்கு முன்னரே தெரிவிக்கப்படும்.
தபால் ஓட்டு மூலம் வீட்டில் வாக்களிக்கும் வசதியை தேர்வு செய்பவர்கள் ஓட்டுப்பதிவு நாளில் நேரடியாக ஓட்டு சாவடியில் ஓட்டு போட முடியாது.
BLO பற்றி தெரிந்து கொள்ள
https://www.erolls.tn.gov.in/blo/
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திருமதி. நித்யா