புதுக்கோட்டை: புதுக்கோட்டைமாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. நிஷா பார்த்திபன் இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி புதுக்கோட்டை மாவட்டம்,
கணேஷ் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புனித ஆரோக்கிய மக்கள் மன்றத்தில் சைபர் கிரைம் திருட்டு குறித்தும் முன்னெச்சரிக்கை குறித்தும்
மக்களுக்கு உங்கள் வங்கி கணக்கில் இருந்து சைபர் கிரைம் திருடர்களால் பணம் திருடப்பட்டால் உடனடியாக 24 மணி நேரத்திற்குள் 155260 என்ற டோல் ஃப்ரீ எண்ணுக்கு தகவல் தெரிவிக்கவும் WWW.Cybercrime. gov.in அஞ்சல் முகவரியில் தெரிவிக்கவும் .
மற்றும் வீட்டில் திருட்டு சம்பந்தமாக குற்ற நடவடிக்கைகளை கட்டுக்குள் கொண்டு வரவும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
என்றும் மக்கள் நலனில் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை