புதுக்கோட்டை: மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு 10.12.2021 இன்று புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்(CWC) திரு. ராஜேந்திரன் அவர்களின் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்கள்,
மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்டங்கள் மற்றும் காவல் நிலையங்களில் உள்ள அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து மனித உரிமைகள் உறுதிமொழி இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலும், இந்தியாவில் செயல்படுத்தத்தக்க பன்னாட்டு சட்டங்களிலும் வரையறுக்கப்பெற்ற உரிமைகள் குறித்து உண்மையுடனும், பற்றுறுதியுடனும் நடந்து கொள்வேன் என்று நான் உளமார உறுதி மொழிகிறேன்.
எவ்வித வேறுபாடுமின்றி, அனைவரின் மனித உரிமைகளை மதித்து நடப்பதுடன், மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், நான் என்னுடைய கடமைகளை ஆற்றுவேன்.
என்னுடைய எண்ணம், சொல் அல்லது செயல் மூலம், பிறருடைய மனித உரிமைகளை மீறுகிற எந்தவொரு செயலையும், நேரடியாகவோ மறைமுகமாகவோ செய்ய மாட்டேன்.
மனித உரிமைகள் மேம்படுத்துவதற்கு, நான் எப்போதும் ஆயத்தமாக இருப்பேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.