புதுக்கோட்டை; புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி உட்கோட்டம், ஆலங்குடி காவல்நிலையத்திற்கு புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. நிஷா பார்த்திபன் இ.கா.ப., அவர்கள் வருடாந்திர ஆய்விற்காக ஆலங்குடி காவல்நிலையத்திற்கு வருகை தந்து வழக்கு கோப்புகள், நிலைய பதிவேடுகளை பார்வையிட்டும், புலன்விசாரணை நிலையில் உள்ள வழக்குகளில் விரைந்து புலன்விசாரணை முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்யவும்,
நீதிமன்றத்தில் வழக்குகளின் முன்னேற்றம் குறித்தும், சாட்சிகளை நீதிமன்றத்தில் காலதாமதம் இன்றி ஆஜர் செய்து வழக்கு விசாரணையை துரிதப்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டணை பெற்றுத்தர காவல் அதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகளை வழங்கியும், காவல் ஆளினர்களிடம் குறைகளை கேட்டறிந்தும் குறைகளை நிவர்த்தி செய்ய உத்தரவு பிறப்பித்தார்கள்.
மேலும் மரம் வளர்ப்பதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆலங்குடி காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்றினை நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
ஆய்வின்போது ஆலங்குடி உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் திரு. வடிவேல் அவர்கள் கலந்துகொண்டார்.