திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு சாலையில் உள்ள சஹானா மில் அருகே முட்புதரில் விற்பனைக்காக கடந்த 2023 ஆம் ஆண்டு 45 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆத்தூர் தாலுகா நெல்லூர் பகுதியைச் சேர்ந்த அக்னிஹாசன்(53). பாண்டிதுரை (34).மற்றும் புலியராஜகாபட்டி பகுதியை சேர்ந்த ஜெயசீலன் (54). ஆகிய 3 நபர்களை திண்டுக்கல் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு மதுரை முதலாம் கூடுதல் சிறப்பு போதை பொருட்கள் மனமயக்கும் பொருட்கள் மற்றும் தடுப்பு வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப அவர்களின் அறிவுறுத்தலின்படி திண்டுக்கல் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.முருகன் அவர்கள், நீதிமன்ற தலைமை காவலர் திரு.வீரையா அவர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர் திரு.விஜய பாண்டியன் அவர்களின் சீரிய முயற்சியால் (16.05.2025) மதுரை போதைப் பொருட்கள் மனமயக்கம் பொருட்கள் மற்றும் தடுப்பு வழக்குகள் நீதிமன்ற நீதிபதி அவர்கள் மேற்கண்ட குற்றவாளிகள் 3 நபர்களுக்கும் தலா 14 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1,00,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா