மதுரை : மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் மதுரை புறநகர் மாவட்டத்தில் குறைந்துள்ளன. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மதுரை மாவட்டத்தில் திருட்டு, வழிப்பறி, மற்றும் சைபர் குற்றங்கள் போன்ற குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் மதுரை மாவட்ட சைபர்கிரைம் காவல்துறையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பாக அதில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டுபிடிக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் பேரிலும், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் வழிகாட்டலின் பேரிலும் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு வாதி குற்றவவாளிகளுக்கு பணம் அனுப்பிய பல்வேறு வங்கி கணக்குகளிலிருந்த இருப்பு பணம் ரூ.17 லட்சம் முடக்கம் செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
மேற்கண்ட குற்றச்சம்பவங்கள் தொடர்பாக தனிப்படை போலீசார் கடந்த 2025-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆன்லைன் பார்ட் டைம் ஜாப் என்ற பெயரில் அவர்களிடம் பணம் invest செய்தால் அதிக பணம் லாபம் சம்பாதிக்கலாம் என்று ஆசைவார்த்தை கூறி மதுரை ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த நபரை ஏமாற்றி அவரிடமிருந்து பணம் ரூ.51,08,578/-ஐயும், கடந்த 2024-ம் ஆண்டு மதுரை கருப்பாயூரணி பகுதியை சேர்ந்த நபரை ஏமாற்றி அவரிடமிருந்து பணம் ரூ.14,63,000/-ஐயும் பெற்று ஆன்லைன் பணமோசடி செய்த சைபர்கிரைம் குற்றவாளிகள் யாரென்று கண்டுபிடித்து இழந்த பணத்தை மீட்டுத்தருமாறு கொடுத்த புகார் மனுவை பெற்று தீவிர புலன் விசாரணை செய்ததில் சைபர் குற்றவாளிகள் பொதுமக்களை ஏமாற்றி ஆன்லைன் பணமோசடி செய்து பெறும் பணத்தை வங்கி கணக்குகள் மூலமாக பணபரிமாற்றம் செய்வதற்கு கமிஷன் பணம் பெற்றுக்கொண்டு உதவியாக இருந்த கர்நாடக மாநிலம் பெங்களூர் பொம்மனஹள்ளி பகுதியை சேர்ந்த சபீர் மகன் முகமது ஆசிப் என்பவரையும், பஞ்சாப் மாநிலம் ராஜ்புரா சுந்தர் நகரை சேர்ந்த தற்போது கர்நாடக மாநிலம் ஜீவன் பீமா நகரில் வசித்து வரும் அஜய் சர்மா மகள் அங்கீட் சர்மா என்ற பெண் ஒருவரையும் மதுரை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
அவர்களின் வங்கி கணக்குகளில் லட்சக்கணக்கில் பணம் பரிமாற்றம் நடைபெற்றிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் இக்குற்றச்சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் யாரென்று கண்டறிந்து கைது செய்த தனிப்படையினரை காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.மேலும், இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீதும், கமிஷன் பணத்திற்காக சிம்கார்டுகள் மற்றும் வங்கி கணக்குகள் ஆகியவற்றை தரும் நபர்கள் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளதோடு, பணமோசடி தொடர்பான சைபர் குற்றங்கள் சம் பாதிக்கப்பட்டால் பொதுமக்கள் தாமதம் செய்யாமல் 1930 என்ற கட்ட தொலைப்பேசியை தொடர்பு கொண்டும் மற்றும் இதர சைபர்குற்றங்கள் சம் பாதிக்கப்பட்டால் www.cybercrime.gov.in என்ற இணையதளம் மூலமாக கொடுக்கவும் மதுரை புறநகர் மாவட்ட மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்