சமயநல்லூர் உட்கோட்டம் சமயநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பரவை அவுலி அம்மன் கோவில் அருகே வசிக்கும் கோவிந்தராஜுலு என்பவர் குடும்பத்துடன் வெளியூர் சென்று திரும்பி வந்த நிலையில், வீட்டில் இருந்த நகைகள் காணவில்லை என்று சமயநல்லூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் சமயநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு, வடுகபட்டியை சேர்ந்த கார்த்திக் கண்ணன் (33). என்பவரை கைது செய்து, சுமார் 30 பவுன் நகைகளை அவரிடமிருந்து மீட்டு, குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.