இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாயாகுளம் கடற்கரைப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், சட்டவிரோதமாக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த முகமது செசிர்கான், கைரூல் முஷரப் மற்றும் கருணை முகமது ஆகிய மூவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், வழக்குப்பதிவு செய்த போலீசார் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















