செங்கல்பட்டு : சாலை பாதுகாப்புக்கான 5 km மினி மாரத்தான் போட்டி செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பாக நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ/ மாணவிகள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.A பிரதீப் I.P.S., அவர்கள் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.