நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் போலீசார் தீவிர மதுவிலக்கு சோதனையில் ஈடுபட்டனா். அப்போது ஒருவர் மறைவான பகுதியில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் வேதாரண்யம் பகுதியை சோ்ந்த நாகராஜன் 40. என்று தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.