திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை காவல் சரகப் பகுதியில் குற்ற செயல்கள் தொடர்பான வழக்குகளில் திருநெல்வேலி, கொக்கிரக்குளத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் சின்னகுட்டி(26). பெருமாள் மகன் அழகுமுத்து(22). ஆறுமுகம் மகன் சங்கர்கணேஷ்(27). ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.
அவர்கள் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டதால் 3 பேரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையா், வினோத் சாந்தாராம்,(கிழக்கு) பரிந்துரையின் பேரில்
மாநகர காவல் ஆணையர், சந்தோஷ் ஹாதிமணி, இ.கா.ப. பிறப்பித்த உத்தரவுப்படி, மேற்கண்ட மூவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் (22.04.2025) அன்று அடைக்கப்பட்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்