திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த அழிஞ்சிவாக்கம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான செங்கல் சூளை இயங்கி வருகிறது.
இங்கு 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்றிரவு இந்த செங்கல் சூளையில் கொட்டகை அமைப்பதற்காக வெல்டிங் பணிகள் நடந்துள்ளது.
இன்று காலையில் வழக்கம் போல பணிகளை மேற்கொள்ள செங்கல் சூளை தொழிலாளர்கள் செல்லும் போது வெல்டிங் பணிகளுக்காக போடப்பட்டிருந்த தகரங்களை மிதித்ததில் தொழிலாளர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். உடலில் மின்சாரம் பாய்ந்ததில் திருவண்ணாமலையை சேர்ந்த ரமணா 23, பிரசாந்த் 22. ஆகிய இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரியபாளையம் போலீசார் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி செய்தியாளர் ‘திரு.சீனிவாசன்