திருவள்ளூர்: கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு பல மாதங்கள் விடுமுறை அளிக்கப்பட்டது இதனை தொடர்ந்து தற்பொழுது குருநாத் தோற்று குறைந்ததன் காரணமாக தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் தொடங்கப்பட்டன.
இதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு செல்ல தொடங்கியுள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் திருவள்ளூர் மாவட்டம் மாதர்பாக்கம் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் தொங்கியபடி மாணவியும் பொன்னேரியில் ஓடும் பேருந்தில் பள்ளி மாணவனும் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான நிலையில் சென்றனர்.
இதனை அறிந்த திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சம்பந்தப்பட்ட மாணவர்களை அழைத்து அறிவுரை வழங்கினார், மயூர் பெரியபாளையம் இடையேயான பேருந்து பயணத்தில் பள்ளி மாணவர்கள் சிலர் தொங்கியபடி சென்றுள்ளனர்.
இவர்களை அழைத்து பெரியபாளையம் காவல் ஆய்வாளர் பரமேஸ்வரி மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து அறிவுரை வழங்கினார். இதேபோன்று பயணம் செய்தால் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று கூறினார்.
மேலும் இதனை தொடர்ந்து ஊத்துக்கோட்டையில் காவல் ஆய்வாளர திரு.குமார் அவர்கள் மாணவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய பயிற்சிகள் கொடுக்கப்படும் என்றும் பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் கலந்துகொண்டு பயன் அடையலாம் என்றும் இனிவரும் காலங்களில் இதுபோன்ற ஆபத்தான முறையில் பயணங்களை மேற்கொள்ள கூடாது என்று அறிவுரை வழங்கினார்.
பின்னர் மாணவர்கள் இனி வரும் காலங்களில் இது போன்று ஆபத்தான முறையில் பயணங்களை மேற்கொள்ள மாட்டோம் என்று உறுதி அளித்தனர்
இந்நிகழ்ச்சியில் ஊத்துக்கோட்டை உதவி ஆய்வாளர் பிரதாப் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திரு.தமிழ்செல்வன் வணிகர் சங்க தலைவர் திரு.ரமேஷ் பள்ளி தலைமையாசிரியர் சற்குணம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஏழுமலை