தென்காசி: தென்காசி மாவட்டம்,வீரசிகாமணியைச் சேர்ந்த திருமலை குமார் என்பவரின் தந்தையான சிவஞானத்திற்கு, முத்துசாமி என்பவர் அவருக்கு பாத்தியப்பட்ட பூர்வீக இடத்தினை 1971 ல் விடுதலை செய்து கொடுத்துள்ளார்.பின்னர் அதனை மறைத்து 1993 ல் நடராஜன் என்பவருக்கு 4 சென்ட் இடத்தை கிரையம் செய்து கொடுத்துள்ளார்.
இது குறித்து அறிந்த திருமலைக்குமார் தங்களது நிலத்தை மீட்டு தருமாறு தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் அமைந்துள்ள நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவில் கடந்த (15.09.2021) அன்று கொடுத்த புகாரின் பேரில், துணைக் காவல் கண்காணிப்பாளர் (DCB) திரு.நல்லசிவம் அவர்கள் தலைமையில் காவல் ஆய்வாளர்(ALGSC) திருமதி. சந்தி செல்வி மற்றும் சார்பு ஆய்வாளர் திருமதி. மாரிச்செல்வி ஆகியோர் விசாரணை மேற்கொண்டு 4 சென்ட் இடத்தினை மீட்டு திருமலை குமார் என்பவரிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கிருஷ்ணராஜ் IPS அவர்கள் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது.
மோசடியாக விற்கப்பட்ட நிலத்தை உரிய முறையில் விசாரணை மேற்கொண்டு மீட்டு ஒப்படைத்த நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்..