திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் சந்திப்பு கைலாசபுரத்தில் உள்ள பழக்கடையில் (24.01.2025) ம் தேதி, கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த சீனிவாசன் (77). என்பவர் பழங்கள் வாங்கிக் கொண்டிருந்த பொழுது தன்னுடைய கைப்பையில் இருந்து 8 கிராம் எடையுடைய சுமார் ரூ 40,000/- மதிப்புடைய 2 தங்க மோதிரங்கள் காணவில்லை என சந்திப்பு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பர்கிட்மாநகரம் பகுதியை சேர்ந்த இசக்கி பாண்டி (38). திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து (12.02.2025)-அன்று இசக்கி பாண்டியை கைது செய்து அவரிடமிருந்து ரூ 40,000/- மதிப்புடைய 2 தங்க மோதிரங்களை பறிமுதல் செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்