திருவள்ளூர்: முகநூல் பக்கத்தில உள்ள இளம் காவலர்களை குறிவைத்து திருமண ஆசைக்காட்டி லட்சக்கணக்கில் பணமோசடி செய்த பெண்ணை ஆவடி காவல் துறை தனிப்படை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைந்துள்ளனர்.
தான் மருத்துவர் என கூறி முகநூலில் இளம் காவல் துறையினரை மட்டும் குறி வைத்து நட்பு ஏற்படுத்தி ,ஒரே ஒரு காவலரிடம் 34 லட்ச ரூபாய் ஆவடியை சேர்ந்த இளம்பெண் ஐஸ்வர்யா ஏமாற்றி மோசடி செய்துள்ளார்.
சென்னை மாநகர காவல் ஆணையர் திரு.சங்கர் ஜீவால் அவர்களிடம் காவலர் கொடுத்த புகாரின் பேரில் மோசடி செய்த பெண்ணை கைது செய்து மோசடி வழக்குப்பதிவு செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
திருவள்ளூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஏழுமலை