திருநெல்வேலி: திருநெல்வேலி முன்னீர்பள்ளம் அருகே கீழச்சேவல், நயினார் குளம், களத்து தெருவை சேர்ந்த பலவேசபாண்டி(36). என்பவருக்கும் தமிழரசி(30). என்பவருக்கும் திருமணமாகி பிரச்சனை காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். குழந்தைகள் தமிழரசியிடம் வளர்ந்து வந்த நிலையில், குழந்தைகளை பார்ப்பதற்காக (17.01.2025) அன்று இரவு தமிழரசியின் வீட்டிற்கு வந்த பலவேச பான்டிக்கும் தமிழரசிக்கும் ஏற்பட்ட தகராறில் பலவேசபாண்டி அருவாளால் வெட்டி கொலை செய்துள்ளார். இது குறித்து முன்னீர்பள்ளம் காவல் ஆய்வாளர், சுரேஷ்குமார் விசாரணை மேற்கொண்டு பல வேசபாண்டியை (18.01.2025) அன்று கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்