திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம், பிரதான சாலையைச் சேர்ந்த பண்டாரம் மகன் ஆனந்த செல்வம் (30). இவர் ஏற்கனவே போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், இவர் மீது அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், வனிதா குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க திருநெல்வேலி மாவட்ட மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், N.சிலம்பரசன், இ.கா.ப.,விடம் வேண்டுகோள் விடுத்ததன் பேரில், காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின்படி செல்வத்தை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் சுகுமார் உத்தரவிட்டார். இதையடுத்து குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஆனந்த செல்வம் அடைக்கப்பட்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்