திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை, மகாதேவன்குளத்தை சேர்ந்த ஆறுமுகம் (27). அதே பகுதியை சேர்ந்த ஒரு சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், கெளரி மனோகரி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற ஆறுமுகத்தை போக்சோ சட்டத்தின் கீழ் (12.02.2025) அன்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்