தென்காசி: தென்காசி மாவட்டம், சுரண்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆலடிப்பட்டியில் வசித்து வருபவர் ராமராஜ் நேற்று அவரது தோட்டத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று சாலையின் ஓரம் வாகனத்தை நிறுத்திவிட்டு அதில் வாகனத்தின் சாவியையும் வைத்து விட்டு தோட்டத்திற்குள் சென்றுள்ளார்.
அதை நோட்டமிட்ட பார்வதிராஜன் என்பவர் இருசக்கர வாகனத்தை திருட முயற்சி செய்துள்ளார், இதை கவனித்த ராமராஜனின் உறவினர்கள் பார்வதிராஜனை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இது குறித்து சுரண்டை சார்பு ஆய்வாளர் திருமதி. விமலா அவர்கள் விசாரணை மேற்கொண்டு மேற்படி இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட கிளாங்காடு பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் பாரதிராஜன் 27. மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்து திருடப்பட்ட TVS XL வாகனம் மீட்கப்பட்டது.