தென்காசி: தென்காசி மாவட்டம் சிவகிரி சோதனை சாவடியில் பெண் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஒரு வாலிபர் முககவசம், ஹெல்மெட் அணியாமல் மதுபோதையில் வந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில், சிவகிரி வடக்கு ரத வீதியை சேர்ந்த ரத்தினகுமார் 24. என்பதும் தெரியவந்தது.
ரத்தினகுமார் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுபற்றிய புகாரின் போில் சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.மனோகரன் வழக்குப்பதிவு செய்து ரத்தினகுமாரை கைது செய்தார்.