தென்காசி: தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கிருஷ்ணராஜ் IPS அவர்களின் உத்தரவின் பேரில் மக்கள் அதிகம் கூடும் பொது இடங்கள், தனியார் நிறுவனங்கள்,பள்ளி கல்லூரிகளுக்கு காவல் துறையினர் நேரில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக தென்காசி மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.அன்னலட்சுமி,சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் திருமதி. ஜோஸ்லின் அருள் செல்வி மற்றும் One Stop Centre ஆகியோர் இணைந்து கடையத்தில் உள்ள சத்திரம் பாரதி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் நாம் தான் நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றும்,
சமூக வலைதளங்களில் முன்பின் தெரியாத நபர்களிடம் பேச வேண்டாம் எனவும் தங்களின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதின் மூலம் பல்வேறு குற்றச் செயல்கள் நடைபெறுகிறது. பாலியல் ரீதியான குற்றங்கள் சம்பந்தமாகவும், அதிலிருந்து எவ்வாறு நம்மை தற்காத்து கொள்ளவேண்டும் என்பது பற்றியும்,
மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றம் குறித்து புகார் அளிக்கும் தொடர்பு எண் (1098,181,14417,155260) மற்றும் காவல் செயலி குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்…