திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், மானூர் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், விஜயகுமார் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அழகியபாண்டிபுரம் மெயின் ரோடு அருகே சந்தேகத்தின் அடிப்படையில் நின்று கொண்டிருந்த அழகியபாண்டியபுரத்தை சேர்ந்த மரியசெல்வம் (வயது 38). என்பவரை சோதனை செய்த போது அவர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து காவல் உதவி ஆய்வாளர் மரியசெல்வத்தை கைது செய்து அவரிடம் இருந்து 525 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்