திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு அருகே மருத குளத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தீயணைப்பு வீரர்களுக்கு உடல் தகுதியை மேம்படுத்த உடற்பயிற்சி கூடம் மற்றும் பொதுஅறிவை மேம்படுத்த கணினி அறை மற்றும் பொது நூலகம் ஆகியவற்றை திருநெல்வேலி மண்டல துணை இயக்குனர், சரவணபாபு திறந்து வைத்தார். உடன் திருநெல்வேலி மாவட்ட தீயணைப்பு அலுவலர், பானுப்பிரியாஉதவி மாவட்ட அலுவலர்,வெட்டும் பெருமாள்,தென்காசி உதவிமாவட்ட அலுவலர் பிரதீப்மற்றும் பயிற்சி கொடுக்கும் அலுவலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இது குறித்து திருநெல்வேலி மண்டல துணை இயக்குனர் கூறுகையில், பயிற்சி பெறும் வீரர்கள் அனைவருக்கும் தீயணைப்பு வீரருக்கான அடிப்படை பயிற்சி மட்டுமல்லாது அவர்களுடைய பொது அறிவையும் உடல் திறனையும் மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்