திருநெல்வேலி : திருநெல்வேலி முன்னீர் பள்ளம் பகுதியில் கடந்த 2017-ம் வருடம் நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அத்தாளநல்லூர், ராஜகுத்தாலப்பேரி, மேலத் தெருவை சேர்ந்த மணிகண்டன் (46). என்பவர் நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 4 மாதமாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால், அவருக்கு நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. மணிகண்டனை வீரவநல்லூர் காவல் நிலைய காவல்துறையினர் தேடி வந்த நிலையில் (16.02.2025) அன்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்