சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், நிர்பயா நிதி உதவியுடன் செயல்பட்டு வரும் திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சென்னை பெருநகர காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றங்களில் ஸ்மார்ட் டிவி மூலம் கல்வி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பை துவக்கி வைத்தார். இதன் மூலம் சென்னை பெருநகரில் உள்ள 112 காவல் சிறார் மன்றங்களில் ஸ்மார்ட் டிவிகள் நிறுவப்பட்டு, இணைய இணைப்பு வழங்கப்பட்டு, அவர்களின் அறிவை வளப்படுத்தவும் அவர்களை ஊக்கப்படுத்துவதையும் இத்தளம் உறுதி செய்யும். இதனால் விளிம்பு நிலையில் உள்ள சிறார்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதை தடுத்து அவர்களை நல்வழிப்படுத்த உதவும்.