கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது கவுண்டனூர் கிராமத்தில் உள்ள பரமசிவம் வீட்டின் அருகே உள்ள வாழைத்தோட்டத்தில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு விரைந்து சென்று சோதனை செய்த போலீசார் சூதாடி கொண்டிருந்த நான்கு நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து சீட்டுகட்டு, ₹500/- ரூபாய் பணம் மற்றும் ஐந்து இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.
















