கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிருஷ்ணகிரி வட்டாட்சியர், மண்டல துணை வட்டாட்சியர் அவர்கள் மற்றும் அகசிப்பள்ளி VAO அவர்கள் கனிம கடத்தலை தடுக்கும் பொருட்டு ரோந்து அலுவலில் இருந்தபோது அகசிப்பள்ளி கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் மண் எடுப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போது வாகனத்தின் ஓட்டுநர்கள் அரசு அலுவலர்களை பார்த்ததும் வாகனத்தை அங்கே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்கள் எனவும் அனுமதியின்றி மண் கடத்த பயன்படுத்திய இரண்டு வாகனத்தை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் கொண்டு வந்து வாகனத்தை ஒப்படைத்து கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.