திருச்சி: திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021 ஆம் ஆண்டு இளையராஜா என்பவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணையானது திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றசெயலில் ஈடுபட்ட முதல் குற்றவாளியான A1 தர்மராஜ் என்பவருக்கு ஆயுள் தண்டனையும் ரூபாய் 10,000/- அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.