திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் குற்ற செயல்களில் ஈடுபட்ட முன்னீர்பள்ளம், தெருவையை சேர்ந்த தளவாய் என்ற முருகன் மகன் முத்து(24). செல்லகண்ணு மகன் மந்திரி என்ற ராஜ்(25). ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கொலை மிரட்டல், திருட்டு போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததால் சேரன்மகாதேவி காவல் ஆய்வாளர், தர்மராஜ் இவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு விடுத்த வேண்டுகோள்படி, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப, பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவுபடி குண்டர் சட்டத்தில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் (19.11.2025) அன்று அடைக்கப்பட்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















