கள்ளக்குறிச்சி : கடந்த (21.08.20219) -ந் தேதி இரவு கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் சந்தபேட்டையைச் சேர்ந்த ரங்கராஜ் மகன் ஜெயக்குமார் என்பவர் வீட்டில் இயங்கி வந்த தனியார் கேஸ் ஏஜென்சி அலுவலகத்தின் பூட்டை உடைத்து 1,32,000/- ரூபாய் பணத்தை திருடி சென்றது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த ரகுமான்பேக் மகன் கரிம்பேக்(44). என்பவர் மீது திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை முடித்து குற்றவாளியின் மீது இறுதியறிக்கை தாக்கல் செய்து நீதிமன்ற விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் (12.01.2024)-ந் தேதி திருக்கோவிலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மாண்புமிகு நீதிபதி திரு.வெங்கடேஷ் குமார் அவர்கள் தனது தீர்ப்பில் காவல்துறை அளித்த சாட்சியங்களின் அடிப்படையில் குற்றவாளி கரிம்பேக் குற்றவாளி என்று உறுதி செய்து, சிறைத் தண்டனைக்குரிய குற்றத்தைப் புரிய இரவில் வீடு புகுந்த குற்றத்திற்காக 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், திருடிய குற்றத்திற்காக 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ஆகிய இரு தண்டனைகளையும் ஏக காலத்தில் அனுபவிக்கவும், மற்றும் 3,000/- ரூபாய் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 2 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு அளித்தார். இவ்வழக்கினை சிறப்பாக புலன் விசாரணை செய்த காவல்துறை அதிகாரிகள், நீதிமன்ற காவலர் மற்றும் அரசு வழக்கறிஞர் ஆகியோர்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சமய் சிங் மீனா, இ.கா.ப., அவர்கள் பாராட்டுகளை தெரிவித்தார்.