கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 28 எஸ்.ஐ.,க்களை நிர்வாக காரணங்களுக்காக இடமாற்றம் செய்து கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி., தங்கதுரை உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தளி போலீஸ் ஸ்டேஷனிலிருந்து ராஜா சங்கிலிகருப்பன், ஊத்தங்கரைக்கும், கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றிய சந்திரா, பர்கூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கும், கே.ஆர்.பி., டேம் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து மும்தாஜ் போச்சம்பள்ளிக்கும், கந்திகுப்பத்தில் இருந்த கனிமொழி, நாகரசம்பட்டிக்கும், நாகரசம்பட்டியில் இருந்த இந்திராணி, கிருஷ்ணகிரிக்கும், ஓசூர் டவுனில் இருந்த மோகன்ராஜ் கிருஷ்ணகிரிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.ஊத்தங்கரையில் எஸ்.ஐ., அன்பழகன் கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் ஸ்டேஷனுக்கும், உத்தனபள்ளியில் இருந்த அமர்நாத், காவேரிப்பட்ட-ணத்திற்கும், கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் நிலையத்தில் இருந்த சுகுமார், கே.ஆர்.பி., டேம் ஸ்டேஷனுக்கும், மாவட்ட குற்றப்பிரிவில் பணியாற்றிய தமிழரசன், கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் ஸ்டேஷனுக்கும், கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் இருந்த ஆனந்தன், காவேரிப்பட்டணத்திற்கும், பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஓசூர் போலீஸ் கட்டுப்பாட்டு அறையிலிருந்து சந்திரசேகர், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கும், பட்டு அன்புக்கரசன், நாகமணி ஆகியோர், கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனிலிருந்தும், சத்யா பர்கூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனிலிருந்தும், ஓசூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். காவேரிப்பட்டணத்தில் பணியாற்றி வந்த பிரபாகரன், பாகலுாருக்கும், மத்துாரில் பணியாற்றி வந்த அசோக்குமார், ஓசூர் டவுனுக்கும், காவேரிப்பட்டணத்தில் இருந்த அறிவழகன், ஓசூர் ஹட்கோ போலீஸ் ஸ்டேஷனுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தேன்கனிகோட்டையில் இருந்த பூர்ணிமா, ஓசூர் சிப்காட்டுக்கும், தளி போலீஸ் ஸ்டேஷனிலிருந்த குமுதா, மத்திகிரிக்கும், சாமல்பட்டி சரவணன், உத்தனப்பள்ளிக்கும், சிங்காரபேட்டையில் இருந்த ரகுநாதன் கெலமங்கத்திற்கும், கெலமங்கலத்தில் இருந்த மாயக்கண்ணன் தளிக்கும், பாகலுாரில் இருந்த தினேஷ் ஆகியோர் தளி போலீஸ் ஸ்டேஷனுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். பர்கூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து சரண்யா நல்லுாருக்கும், ஓசூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனிலிருந்த ஜூடித் கிருபா மாவட்ட குற்றப்பிரிவுக்கும், ராயக்கோட்டையில் இருந்த பசுபதி ஓசூருக்கும், சீனிவாசன் சிங்காரபேட்டைக்கும் இடமாற்றம்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்




















