திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா சோழவரம் ஊராட்சி ஒன்றி யத்திற்கு உட்பட்டது பஞ்செட்டி ஊரா ட்சி இந்த ஊராட்சியில் உள்ள தச்சூர் பகுதியில் வேலம்மாள் மெட்ரிகுலே ஷன் தனியார் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் கும்மிடிப்பூண்டி காவல் துறை சார்பாக விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கும்மிடிபூண்டி காவல் துணை கண்காணிப்பாளர் திரு.ரித்து தலைமையில் விழிப்புணர்வு குறித்து மாணவ மாணவிகளுக்கு விளக்கினார்.
அப்பொழுது அவர் கூறியதாவது
மாணவ மாணவிகளுக்கு அதிகரித்து வரும் வாகன விபத்துகளை கட்டுப்ப டுத்தும் விதமாக போக்குவரத்து வழி காட்டி விதிமுறைகள், கடைப்பிடிக்க வேண்டும்,
பள்ளி கல்லூரி மாணவர் களிடையே பரவலாக அதிகரித்து வரும் போதைப் பழக்கம் மற்றும் அதனால் ஏற்படும் தீங்குகள், நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான நடைபெறும் பாலியல் வன்கொடுமை கள் மற்றும் பெண்களை பாதுகாத்துக் கொள்ளும் விதமாக தமிழக காவ ல்துறை அறிமுகப்படுத்தியுள்ள காவலன் செயலி, அவசர பாதுகாப்பு எண் கள் மற்றும் பயன்படுத்தும் முறைகள், குழந்தை திருமணம் மற்றும் தடுக்கு ம் முறைகள் குறித்த விரிவான விழிப் புணர்வு ஏற்படுத்தி தெரிவித்தார்
பின்னர் காவல் ஆய்வாளர்கள் திரு.பாலசுப்பிரமணி, திரு.பரிபூரணம், மருத்துவர் கள் திரு.பிரவீன், திரு.கவுதமிபிரவீன், அதில் பங்கேற்று மாணவர்களுக்கு விழிப்பு ணர்வை ஏற்படுத்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி கலந்து கொண்டு அரசு அதிகாரிகளுக்கு நன்றியுரை யாற்றினார்.
திருவள்ளூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஏழுமலை