நாமக்கல் : நாமக்கல் மாவட்டம் வேலூர் உட்கோட்டம் வேலகவுண்டம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எர்ணாபுரம் சி.எம்.எஸ் பாலிடெக்னிக் கல்லூயில் விஜயன்-(18). த.பெ.செல்வராசு என்பவர் டிப்ளமோ அக்ரிகல்ச்சர் டெக்னாலஜி 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த (18.11.2023)-ம் கல்லூரி மாணவர் விடுதியில் தூக்குபோட்டு இறந்துள்ளார். இது சம்மந்தமாக விஜயனின் தந்தை செல்வராசு-(46) த.பெ. நாராயணன் வேதாரண்யம் என்பவர், வேலகவுண்டம்பட்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வேலகவுண்டம்பட்டி காவல் நிலைய குற்ற எண்.145/2023 U/S 174 Cr.P (Hanging Suspicious Death)ஆக வழக்கு பதிவு செய்து மேற்படி பிரேதம் நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை (வீடியோ பதிவுடன்) செய்து பிரேதத்தை (19.11.2023)-ம் தேதி விஜயனின் தகப்பனர் வசம் பிரேதம் ஒப்படைக்கப்பட்டது. இது சம்மந்தமாக காவல் ஆய்வாளர் முறையாக விசாரணை செய்து வருகிறார்.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் மாணவர் இறப்பு சம்பந்தமாக தவறான செய்திகள் மற்றும் வதந்திகள் பரவி வருவதை யாரும் நம்ப வேண்டாம். மேலும் வதந்திகள் பரப்புவோர் பற்றிய விவரங்கள் சமூக ஊடக பிரிவினர் மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.