கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கர்னூர் கிராமத்தில் உள்ள மெட்டல் மேன் கம்பெனியில் முத்துசாமி என்பவர் சீனியர் மேனேஜராக பணிபுரிந்து வருவதாகவும் (14.05.2025) ஆம் தேதி ஸ்கிராப் குடோனை ஆய்வு செய்தபோது சுமார் 200 கிலோ ஸ்கிராப் பொருட்கள் திருடு போனது தெரிந்து CCTV கேமராவை ஆய்வு செய்தபோது (14.04.2025) ஆம் தேதி குற்றவாளி ஈச்சர் வாகனத்தில் ஸ்கிராப் பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது. முத்துசாமி திருடிய நபர் மீது காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து போலீசார் விசாரணை செய்து ஸ்கிராப் பொருட்களை திருடிய நபரை கைது செய்து அவரிடமிருந்து 200 கிலோ ஸ்கிராப் பொருட்களை பறிமுதல் செய்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்