திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணிய சமூக இடைவெளியை கடைப்பிடித்து அவர்களிடம் இருந்து இதுவரை மூன்று கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சியர் திரு.ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் திருவள்ளூர் மாவட்டத்தில் கொரானா பரவலை குறைக்கும் வகையில் பொது இடங்களில் முகக் கவசம் அணியாத, சமூக இடைவெளியை கடைபிடிக்காத அவர்களிடமிருந்து சுகாதாரத் துறை காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் அபராதம் வசூலித்து வருகின்றனர்.
மாவட்டத்தில் இதுவரை முகக் கவசம் அணியாமல், சமூக இடைவெளியை கடைபிடிக்காத 1,24,009 பேரிடம் இருந்து மூன்று கோடி அபராதம் வசூலித்தனர். இதில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை 2,500 பேரிடம் 5 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் மாவட்டத்தில் கொரானா பரவலை எதிர்கொள்ள கொரானா தடுப்பு மையங்களில் 1400 படுக்கைகளும், அரசு மருத்துவமனைகளில் 330 ஆக்சிஜன் படுக்கைகளும், திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 400 ஆக்சிஜன் படுக்கைகளும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஏழுமலை