திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்த போது, மேல இலந்தைகுளம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த மேல இலந்தைகுளம், பழைய ஸ்டேட் பேங்க் தெருவை சேர்ந்த மதன் (20). என்ற வாலிபரை சோதனை செய்த போது அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து தேவர்குளம் காவல் உதவி ஆய்வாளர், லூக் அசன் வழக்கு பதிவு செய்து மதனை (24.04.2025) அன்று கைது செய்து அவரிடமிருந்து 82 கிராம் கஞ்சாவையும், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்