திருநெல்வேலி: திருநெல்வேலி முன்னீர்பள்ளம் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், நித்யா தலைமையிலான காவல்துறையினர் (31.05.2025)அன்று ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது தருவை பனங்காட்டு பகுதி அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களோடு நின்று கொண்டிருந்த மேலமுன்னீர்பள்ளம் முத்து நகரைச் சேர்ந்த மகேஷ்வரன் (35). தெருவை அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த லட்சுமணன் (25) மேலமுன்னீர்பள்ளம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த பண்டாரம் (20). ஆகிய மூவரிடமும் சோதனை மேற்கொண்ட போது சுமார் 120 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது. அவர்கள் மூவரையும் கைது செய்த காவல்துறையினர் அவா்களிடமிருந்து 120 கிராம் கஞ்சா, கார், பைக் ஆகியவை பறிமுதல் செய்தனர். போதைப் பொருள்களை விற்பனை செய்பவர்கள் மற்றும் வாங்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.சிலம்பரசன்,இ.கா.ப., எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்