திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் காவல் அதிகாரிகளுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன்., இ.கா.ப, தலைமையில் (06.11.2025) அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை, நிலுவையில் உள்ள வழக்குகள் போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது உட்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்து ஆய்வு நடைபெற்றது. முன்னதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாகனங்கள் நல்ல முறையில் பராமரிக்கப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டு வாகன ஓட்டுநர்களுக்கு முக்கிய அறிவுரைகள் வழங்கி, வாகனங்களின் நிறை குறைகளை கேட்டு தெரிந்து கொண்டார்.
பின்பு மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் உள்ள சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று கொடுத்த காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள், மற்றும் அரசு வழக்கறிஞர்கள் உட்பட மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த 118 நபருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் அழைத்து நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார். ஆய்வு கூட்டத்தில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் துணை காவல் கண்காணிப்பாளர்கள், அரசு வழக்குரைஞர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் மாவட்ட ஊர்க்காவல் படை வட்டார தளபதி அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்















