திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பழனி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த (21.08.2022), ம் தேதி தொழில் போட்டி காரணமாக மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஜெயந்த் சமந்தா (34), என்பவரை கொலை செய்த வழக்கில் பழனியைச் சேர்ந்த 1) தர்மராஜ் (35), ராமதுரை (23), மற்றும் ஈரோட்டை சேர்ந்த மணிகண்டன் (26), தினேஷ் குமார் (22), சந்திர பிரகாஷ் (23), நவீன் குமார் (26) ஆகிய 06 நபர்களை பழனி நகர் காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்கள்.
இந்நிலையில் இக்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 06 நபர்களின் குற்ற நடவடிக்கைகளை ஒடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன், அவர்களின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் திரு.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் 06 நபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். உத்தரவை தொடர்ந்து பழனி நகர் காவல் நிலைய போலீசார் திரு.தர்மராஜ், திரு.ராமதுரை, திரு.மணிகண்டன், திரு.தினேஷ்குமார், திரு.சந்திர பிரகாஷ், நவீன் குமார், ஆகிய 6 நபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















