செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.அ.பிரதீப், இ.கா.ப., அவர்களின் தலைமையில், கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு குறித்த நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் ECR சாலையில் உள்ள தங்கும் விடுதி உரிமையாளர்கள், மேலாளர்கள் மற்றும் செய்தியாளர்கள் கலந்துகொண்டார்.