செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் உட்கோட்டம் ஜி5 சூனாம்பேடு காவல் நிலைய எல்லைக்குப்பட்ட பகுதிகளில் கள்ளதனமாக பாண்டிச்சேரி மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க வேண்டி செங்கல்பட்டு மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் V.V.சாய் பிரனித் அவர்களின், உத்தரவின் பேரில் மதுராந்தகம் காவல் துணை கண்காணிப்பாளர் K.சிவசக்தி அவர்களின், மேற்பார்வையில் ஜி5 சூனாம்பேடு காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. M.அமிர்தலிங்கம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்த நிலையில் புதுப்பட்டு To ஆலத்தூர் ரோடு ஆலத்தூர் கிராமத்தில் வாகன தணிக்கை செய்த போது சந்தேகத்திற்கிடமாக வந்த INNOVA காரை நிறுத்தி சோதனை செய்ததில் ஒரு அட்டை பெட்டியில் 180 அட அளவு கொண்ட 48 பாட்டில் புதுச்சேரி பிராந்தி பாட்டில்கள் 49 அட்டைபெட்டிளில் மொத்தம் 2352 பாட்டில்கள் இருந்தது. காரை ஓட்டி வந்த குற்றவாளியானவரை விசாரிக்க தேவநாதன் வயது (38) என தெரிய வந்தது. கார், பிராந்தி பாட்டில்கள் 49 அட்டைபெட்டிகளில் மொத்தம் 2352 பாட்டில்கள் கைப்பற்றப்பட்டது. அதன் மதிப்பு 6,45,000-ஆகும்.
செங்கல்பட்டிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
இரா.இளங்கோவன்