கரூர் : கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீதும் ரவுடிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், நீதிமன்ற அலுவல்கள் குறித்தும் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் குறித்தும் ஆய்வு நடைபெற்றது.
மேலும் கொலை வழக்குகள், வழிப்பறி குற்றவாளிகள், இரவு மற்றும் பகல் கன்ன களவு குற்றவாளிகள், போக்கிரிகள் மற்றும் திட்டமிட்டு செயல்படும் குற்றவாளிகள், ஆகியோர்களை தொடர்ந்து கண்காணித்து முறையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளார்கள். கரூர் மாவட்டத்தில் போக்குவரத்து விதிமீறல்களை கண்காணித்து அபராதம் விதிக்கும் இ – சலான் நடைமுறையில் உள்ளது. சாலை விபத்துக்களை குறைத்து உயிரிழப்புகளை தடுத்த கரூர் மாவட்ட காவல் ஆய்வாளர்கள் மற்றும் போக்குவரத்து காவல்
ஆய்வாளர்களுக்கு குற்ற கலந்தாய்வு கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டு தெரிவித்தார். மேலும் காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்களுக்கு கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஏ.சுந்தரவதனம், இ.கா.ப,. அவர்கள் பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கினார்.