கரூர் : திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் குற்ற கலந்தாய்வு கூட்டம் D.G.P முனைவர் திரு c.சைலேந்திரபாபு, இ.காப தலைமையில் நடைபெற்றது
குற்ற வழக்கில் சிறப்பாக பணியாற்றிய காவல் அலுவலர்கள் மற்றும் காவலர்களுக்கு காவல்துறை தலைமை இயக்குனர் முனைவர் திரு c.சைலேந்திரபாபு, இ.காப. அவர்களால் பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் திரு.G. கார்த்திகேயன்,இ.காப. காவல்துறை தலைவர் மத்திய மண்டலம் திருச்சி, திரு.A.சரவணசுந்தர்,இ.கா.ப. காவல்துறை துணைத் தலைவர் திருச்சி சரகம்,
திரு.E. சுந்தரவதனம்,இ.கா.ப, கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் ஆகிய 5 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கரூர் மாவட்டத்தில் POCSO வழக்கில் சிறப்பாக செயல்பட்டு 20 வருட சிறை தண்டனை பெற்றுக் கொடுத்த குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.P. மங்கையர்க்கரசி அவர்களுக்கும் சைபர் கிரைமில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை விரைந்து பிடித்த உதவி ஆய்வாளர் திரு.B. சையத் அலி மற்றும் தனி பிரிவில் சிறப்பாக பணிபுரிந்த முதல் நிலை காவலர் திரு.T. மோகன்ராஜ் மற்றும் காவலர் திரு.A.கதிர்வேல் ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கினார்