தேனி : சிறுவர், சிறுமியர் தொடர்பான வழக்குகளில் அவர்களுக்கு தேவையான ஆலோசனை வழங்குதல் மற்றும் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வரும் நபர்களின் குழந்தைகளை மகிழ்விக்கும் வண்ணம் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் விளையாட்டுப் பொருள்கள், புத்தகங்கள், மற்றும் சுவர்களில் கார்ட்டூன் ஓவியங்கள் வரைந்து மழலையர் மகிழ்ச்சி மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தேனி, ஆண்டிபட்டி, போடி மற்றும் உத்தமபாளையத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் மழலையர் மகிழ்ச்சி மைய அறைகளை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (CWC) திரு.K.M.சங்கரன் அவர்கள் பார்வையிட்டு காவல்துறையினருக்கு ஆலோசனை வழங்கினார்.