தஞ்சை: தஞ்சை அடுத்த சாமிமலை காவல் நிலையத்துக்கு உட்பட்ட சோழன் நகரில் தாலிச் செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது.சித்ரா வயது 47கணவர் பெயர் சௌந்தரராஜன் சித்ரா பாபநாசத்தில் உள்ள அம்மாவீட்டிற்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது சோழன் நகர் என்ற இடத்தில் தனது மகளுடன் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருக்கும் போது அடையாளம் தெரியாதமாஸ்க் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் சித்ரா அணிந்திருந்த 5 பவுன் தாலி செயினை பறித்து அதிவேகத்தில் சென்றுவிட்டனர்.
சித்ரா சுவாமி மலை காவல்நிலையத்தில் புகார் கொடுத்தhர் சுவாமி மலை காவல்துறை ஆய்வாளர் மகாலட்சுமி திருவலஞ்சுழியில் இருந்து பாபநாசம் வரை இருக்கக்கூடிய அனைத்து சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்யும் பணியை துவக்கி உள்ளார்.
நமது செய்தியாளர்
குடந்தை
ப-சரவணன்
கும்பகோணம்