பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் அரணாரை கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித் திரிந்த செல்வேந்திரன் (37). என்ற நபரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ச.ஷ்யாம்ளா தேவி அவர்களின் உத்தரவின்படி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.மருதமுத்து அவர்கள் கடந்த (12.12.2023) அன்று மேற்படி நபரை மீட்டு பெரம்பலூர் வேலா கருணை இல்ல நிர்வாகி திருமதி.அனிதா அவர்களிடம் ஒப்படைத்தனர். பின்னர் மேற்படி நபரை மனநல மருத்துவர் திரு.அசோக் அவர்கள் மூலம் வேலா கருணை இல்லத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் (03.01.2024) -ம் தேதி மேற்படி செல்வேந்திரனின் தந்தையான ராஜேந்திரன் இலந்தைப்பட்டி, திருவெரும்பூர், திருச்சி மாவட்டம். என்பவரிடம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.மருதமுத்து மற்றும் வேலா கருணை இல்ல நிர்வாகி திருமதி.அனிதா ஆகியோர்களால் நல்லமுறையில் ஒப்படைக்கப்பட்டார். இச்செய்தியறிந்த பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ச.ஷ்யாம்ளா தேவி அவர்கள் மனநல மருத்துவர் திரு.அசோக் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.மருதமுத்து, வேலா கருணை இல்ல நிர்வாகி திருமதி.அனிதா ஆகியோரை வெகுவாக பாராட்டினார்கள்.