பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2020 -ம் ஆண்டு துறைமங்கலம் கிராமத்தைச் சிறுமியை செல்வம் (42). த/பெ வையாபுரி எளம்பலூர், இந்திரா நகர், பெரம்பலூர். என்பவர் மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்ததாக பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் 12/20 U/s 5 (l) r/w 6 of POCSO ACT 2012 506(i) IPC & 3(1) (XII) 3(1)(w)(ii),3(2)(v) of SC/ST ACT 1989 -ல் வழக்கு பதிவு செய்து இவ்வழக்கில் குற்ற இறுதி அறிக்கை பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்கில் சாட்சிகள் அனைவரிடமும் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டது.இவ்வழக்கில் (29.11.2023)-ம் தேதி இவ்வழக்கின்குற்றவாளியின் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டு இவ்வழக்கின் குற்றவாளியான செல்வம் (42). த/பெ வையாபுரி எளம்பலூர் இந்திரா நகர் பெரம்பலூர். என்பவருக்கு 5 (l) r/w 6 of POCSO ACT 2012 -ன் படி 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 50000/- அபராதமும் விதித்தும் Sec 506(i) IPC -ன் படி 2 வருடம் சிறைதண்டனை என மொத்தம் 22 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூபாய்.50000 அபராதமும் அபராதத்தை கட்டத்தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க தீர்ப்பளித்த பெரம்பலூர் மாவட்ட குடும்ப நல நீதிமன்ற நீதிபதி திரு.தனசேகரன் அவர்கள்.மேற்படி போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை கிடைக்க சிறப்பாக செயல்பட்ட பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற காவலர் ஆகியோரை பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ச.ஷ்யாம்ளா தேவி அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.