பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2021 -ம் ஆண்டு சிறுமியை மிரட்டி பாலியல் வண்புணர்வு செய்த வழக்கின் குற்றவாளியான ஆனந்தராஜ் (41/23). த/பெ கலியபெருமாள் பங்களா ஸ்டாப், துறைமங்கலம், பெரம்பலூர். என்பவர் மீது பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட Cr.No.22/21 U/s 5 (m) r/w 6 of POCSO ACT என்ற வழக்கானது பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணை முடிக்கப்பட்டு (29.12.2023)-ம் தேதி குற்றம் நிரூபிக்கப்பட்டதால் இவ்வழக்கின் குற்றவாளியான ஆனந்தராஜ் (41/23). த/பெ கலியபெருமாள் பங்களா ஸ்டாப், துறைமங்கலம், பெரம்பலூர். என்பவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 50000/- அபராதமும் அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை எனவும் தண்டனை என தீர்ப்பளித்து மகிளா நீதிமன்ற நீதிபதி அவர்கள் உத்தரவிட்டார். மேற்படி போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை கிடைக்க சிறப்பாக செயல்பட்ட பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற காவலர் ஆகியோரை பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ச.ஷ்யாம்ளா தேவி அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.